Tuesday, 12 July 2016

கன்னியாஸ்திரி ஜெஸ்மியும், அவரது ‘ஆமென்’ வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமும்

amen book 450கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தி லுள்ள சிரைக்கேக்காரன் சி.வி. ராபேலுக்கும், கொச்சு அன்னத்திற்கும் 1956- நவம்பர் மாதம் 6-ஆம் தேதி மகளாகப் பிறந்தவர் கன்னியாஸ்திரி  ஜெஸ்மி அவர்கள்.  தொடக்கக்கல்வியை புனித ஜோசப் லத்தீன் கான்வென்டிலும், கல்லூரிப் படிப்பை சேரூர் விமலா கல்லூரியிலும் (இளங் கலை), மெர்சி கல்லூரியிலும் (முதுகலைப்படிப்பு) முடித்தவர் - ஜெஸ்மி சிஸ்டர்.  சந்நியாசினியான பிறகும் கூட கல்வித்துறையை அவர் விடவில்லை. 
1980-இல், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் சேர்ந்து படித்தார், அவர்.  இதன்பிறகு, எம்.பில்; பி.ஹெச்.டி பட்டங்கள் போன்றவைகளைப் படித்துப் பெற்றார்.  விமலா கல்லூரியில் மூன்று ஆண்டுகள் துணை முதல்வராகப் பணிபுரிந்தார்.  பின்னர், புனித மேரிக்கல்லூரியில் மூன்று ஆண்டுகள் முதல் வராகப் பொறுப்பேற்றிருந்தார். 
இப்படி, தன் வாழ்நாளில் கன்னியாஸ்திரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றிய ஜெஸ்மி சிஸ்டர், தன்னை நிரந்தரமாக அவர் சேர்ந்திருந்த கன்னியாஸ்திரி மடத்திலிருந்தும், அந்த வாழ்க்கையிலிருந்தும் தன்னை முற்றாக விலக்கிக்கொண்டவர்; அதுவும் சபையின் அனுமதியோடு, இப்போது சந்நியாசினி யாகத்தான் வாழ்ந்து வருகிறார்.
 சிஸ்டர் ஜெஸ்மி அவர்கள், வெள்ளையங்கியை அணிந்து கொண்டு நடக்கும் வெறும் சிஸ்டர் மட்டுமல்ல; சிறந்த மனிதநேயமுள்ள ஒரு பெண்கவியும் கூட! மூன்று கவிதைத் தொகுதிகளை ஆங்கிலத்தில் எழுதி, இவர் வெளியிட்டிருக்கிறார்.  ஒரு கட்டுரைத் தொகுதியும் இவரால் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஜெஸ்மி சிஸ்டர் அவர்கள், சமீபத்தில் தனது வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு புத்தகத்தை எழுதி, வெளியிட்டிருக் கிறார்.  ‘தெய்வ ஊழியம் ஒன்றே எனது வாழ்க்கையின் லட்சியம்’ என்ற கொள்கையின் அடிப் படையில் கன்னியாஸ்திரி மடத்தில் போய்ச் சேர்ந்த இவருக்கு, அங்கு சில கசப்பான அனு பவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  அதனால் பல மன அதிர்ச்சிகளுக்கு ஆளாகியிருக்கிறார், இவர். 
அவைகளெல்லாம் உள்ளடக்கியதாக அமைந் திருக்கிறது இவரது சுயசரிதையான ‘ஆமேன்’ நூல்.  இந்நூல் தற்போது கேரளமெங்கும் வாசிக்கப் பட்டு வருவதோடு, மிகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது.
அதன் உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்! முதலில் ஜெஸ்மி சிஸ்டர், கன்னியாஸ்திரி மடத்தைப்பற்றியோ, கிருஸ்தவ மிஷினரிகளைப் பற்றியோ எதுவும் தெரியாதவராகத்தான் இருந்திருக்கிறார்.  இதைப் பற்றி, வீட்டில் வைத்து சிந்திக்கவோ அல்லது சர்ச்சை செய்ததோ கூடக் கிடையாது என்கிறார் இப்புத்தகத்தில் அவர்.
நாம் மேலே குறிப் பிட்டவைகளைப் பற்றி சில கிருஸ்தவக் குடும்பங்கள் மட்டுமே விவாதங்கள் செய்யலாம் என்றும், அக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் மடங்களில் சேர்ந்து ‘தெய்வ ஊழியம்’ செய்யலாம் என்றும் ஜெஸ்மி சிஸ்டர் எண்ணியிருந்தாராம்!
என்றாலும், தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளதால் கன்னியாஸ்திரி மடத்தில் சேர்ந்து கடவுளுக்கும், பாவப்பட்ட ஏழை மக்களுக்கும் தொண்டு செய்ய நினைத்துதான் நான் மடத்தில் சேர்ந்தேன் என்கிறார் ஜெஸ்மி சிஸ்டர், தன்னுடைய ‘ஆமேன்’ புத்தகத்தில்.
மடத்தில் சேர்ந்து சில நாட்களிலேயே, அங்கே அவர் காண நேர்ந்த சில சம்பவங்கள் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கின்றன.
ஜெஸ்மி சிஸ்டர் அவைகளில் சிலவற்றைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
‘கன்னியாஸ்திரி மடத்திற்குள், கன்னியாஸ்திரி களால் சிரிக்கமுடியாது; எதையும் ரசிக்க முடி யாது.  ஏன், பெண்களைப் போல அவர்களால் நடக்கக் கூட முடியாது.  சிலர், அவர்களுடைய மார்புகளை அகற்றிக் கொள்ளும் போது எவ்வளவு வேதனையெடுக்கும்?’ (சில கன்னியாஸ்திரிகள் ஆண்களை வசீகரிக்காமல் இருப்பதற்காக வேண்டி தங்களுடைய மார்புகளை ஆபரேஷன் செய்து அகற்றிவிடுவார்கள் போலிருக்கிறது!) என, ஆரம்பக் காலத்தில் ஜெஸ்மி சிஸ்டர் தன் தாயிடம் கேட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது கருத்துப்படி ‘சிஸ்டர்களுக்கு முலைகள் தேவை கிடையாது.  பிறகு எதற்காக வேண்டி அவர்கள் அதை வைத்துக்கொண்டிருக் கிறார்கள்?’ என்பதாகும்.  அதற்குக் காரணமும் இருந்தது.  கல்யாணம் பண்ணி, குழந்தைகள் பெற்றுப் பாலூட்டுவதற்காக வேண்டியுள்ள தல்லவா, அது!’ என, ஜெஸ்மி சிஸ்டர் ஒரு கேள்வியையும் எழுப்புகிறார்.
அவர் சொல்கிறார்: “நான் மடத்தில் சேரு வதற்காக ஆசைப்பட்டது, கடவுளுக்கு ஊழியம் செய்வதற்காக வேண்டி மட்டுமே!” என்று.
கன்னியாஸ்திரி மடத்தில், அடிக்கடி சிஸ்டர்கள் திருட்டுத்தனம் பண்ணுவதை எடுத்துக் காட்டுகிறார்.  மட்டுமின்றி, தேவ ஊழியம் என்ற பெயரில் மடத்தில் சேர்ந்து கொண்டிருக்கும்
பல கன்னியாஸ்திரிகளுக்கிடையே பாலியல் ரீதியான தகாத நடைமுறைகள் நடைபெறு வதையும் ஜெஸ்மி சிஸ்டர் சுட்டிச் செல்கிறார்.  (ஆமேன் - பக் - 37)
மடத்தில் அடிக்கடி குழுச்சண்டையும் நடை பெறுமாம்! மடத்தில் புதிதாக வந்து சேரும் இளம் கன்னியாஸ்திரிகள் இக்குழுக்களில் ஏதாவது ஒன்றில் சேர்ந்தே தீரவேண்டுமாம்.  ‘அப்படி சேராமல் மடத்தினுள்ளே இருக்க முடியாது’ என்கிறார் ஜெஸ்மி சிஸ்டர் (மேலது - பக்- 37).
இனி, பாவமன்னிப்பு கேட்கப் போகும் வேளையில் நடைபெறும் சில தில்லுமுல்லு களையும் இப்புத்தகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
பாவமன்னிப்புக் கேட்கப் போகும் வேளையில், பெண்களைப் பிடித்து முத்தம் கொடுப்பதாகவும், தனக்கு ஒரு முறை இப்படி, முத்தம் தர பாதிரியார் முயன்றதாகவும் சிஸ்டர் ஜெஸ்மி குறிப்பிடுகிறார்.  இது, பிரச்சினையாகவே, ‘நான், அவர்களின் சம்மதத்துடனேயே முத்தம் கொடுப்பேன்’ என, பாதிரியார் விளக்கம் சொன்னதாகவும் ஜெஸ்மி சிஸ்டர் சுட்டிச் செல்கிறார்.  (புத்தகம் மேலது, பக்- 45).  மேலும், புனித பாலின் வசனப்படியேதான் இவ்வாறு செய்கிறேன் என, பாதிரியார் தன்னை நியாயப்படுத்தியதாகவும் சிஸ்டர் எழுதுகிறார்.  (புத்தகம் மேலது, பக்- 45).
கன்னியாஸ்திரிகளில் பலர், மடத்திற்குள் பாலியல் ரீதியான வக்கிரத்தனங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக வேண்டி மடத்தை விட்டு வெளி யேற்றப்பட்டதையும் சிஸ்டர் எடுத்துக்காட்டு கிறார்.
கன்னியாஸ்திரி மடத்திற்குள் நடைபெறும் தீண்டாமையைப் பற்றியும் இப்புத்தகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.  மடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தலித் மக்களுக்காக வேண்டி ஒதுக்கப்பட்டுள்ள சீட்டுக்களை மேனேஜ் மென்ட் தட்டிப் பறித்து, சில தில்லுமுல்லுகள் நடத்தி, அவைகளை மேனேஜ்மென்ட் சீட்டுக் களாக மாற்றி ‘நன்கொடை’ என்ற பேரில் பிற சாதிப்பிரிவினருக்குக் காசுக்காக வேண்டி விற் பதையும் ஜெஸ்மி சிஸ்டர் சுட்டிக் காட்டுகிறார்.
ஜெஸ்மி சிஸ்டர் மேலும் தொடருகிறார்:
“சிஸ்டர் விமி.  (பெயர் மாற்றப்பட்டிருக் கலாம்) இவர், கல்லூரியில் மலையாளம் டிபார்ட் மெண்டிலே சீனியர் சிஸ்டர்; ஆசிரியையாக இருந் தார்.  நான் காலதாமதமாகத்தான் இவரோடு அறிமுகமானேன்.  இவர் ஹோமோ செக்ஸில் அதிக நாட்டமுள்ளவராக இருந்தார்.  ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவி ஒருத்தியுடன் ‘பாலியல் சேட்டை’யில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஒருமுறை கையும் களவுமாகப் பிடிக்கப் பட்டார்,” என்கிறார், சிஸ்டர் ஜெஸ்மி.  (புத்தகம், மேலது - பக்கம் - 54).
மாலு என்ற பெண்ணுடன் இந்தத் தகாத பாலியல் உறவு தொடர்ந்து நடைபெற்றுக் கொண் டிருந்ததாகவும், மாலு படிப்பு முடிந்து போனதும், அந்த சீனியர் சிஸ்டரின் கவனம் தன் பக்கமாகத் திரும்பியதாகவும் ஜெஸ்மி சிஸ்டர் கூறுகிறார்.  பாலியல் விவகாரங்களில் அதிக விருப்பம் இல்லாத ஜெஸ்மி சிஸ்டர் இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.  இதையறிந்ததும், விஷயம் தெரிந்த பிற சிஸ்டர்கள் சீனியர் கன்னியாஸ்திரியின் ஆசைக்குக் கட்டுப்படுமாறு உபதேசம் பண்ணு கிறார்கள்.  அப்படி கட்டுப்படவில்லையெனில், அவர் மடத்திலுள்ள எல்லா சிஸ்டர்களையும் பார்த்து, வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவார் களாம்! எனவே, அவரது காம உணர்வைத் தணித்துக் கொள்ள, சீனியர் சிஸ்டருக்கு ‘ஒத்துழைக்க’ வேண்டியதாயிற்றதாம்! (புத்தகம் மேலது, பக்கம் - 55)
நம் நாட்டில் இதுவரையில் எந்தவொரு கன்னியாஸ்திரியும் வெளிப்படுத்தாத சில விஷயங் களை ஜெஸ்மி சிஸ்டர் துணிச்சலோடு வெளிப் படுத்தியிருப்பதைக் காண முடிகிறது.  இது, சர்வ சாதாரண விஷயம் ஒன்றுமல்ல! காரணம், தமிழ் நாட்டில் பாமா சிஸ்டர் எழுதி வெளியான ‘கருக்கு’ நாவல் கூட துணிச்சலோடு இம்மாதிரி எழுதப்பட்டிருக்கிறதா? என்றால் ‘இல்லை’ என்று தான் சொல்லத் தோன்றும்.  அந்த அளவுக்கு ‘ஆமேன்’ வாழ்க்கை வரலாற்று நூல் தைரியமாக சில விஷயங்களைத் திறந்து காட்டுகிறது.
இனி, கேரள மாநிலம் மதவிஷயங்களைப் பொறுத்தமட்டில் பிற மாநிலங்களைப் போல் இல்லை.  மதநிறுவனங்களும், சாதிச் சங்கங்களும் இப்போது, கேரள மாநிலத்தில் மிக வலுவாகக் காலூன்றி நின்றுகொண்டு செயல்படும் காலம்.  சமூக, அரசியல் சக்திகளின் போக்கைக் கூட அவைகளால் இன்று கேரளத்தில் திசைதிருப்ப முடியும்.  இவைகளின் எதிர்ப்பை உதாசீனப் படுத்திக் கொண்டு இன்றைய கேரளத்தில் எதுவும் செய்யவியலாது.  கிருஸ்தவ மத நிறுவனங்கள் நினைத்தால் கேரள அரசியலின் போக்கையே நிர்ணயிக்க முடியும்.
கிருஸ்தவ மதங்களின் சக்தி இப்படியிருக்க, அவைகளையெல்லாம் மீறிக் கொண்டு மடங் களுக்குள் மறைமுகமாக சமூகத்திற்குக் கொண் டிருக்கும் விஷயங்களை சமூகத்திற்கு புத்தகம் வாயிலாக எடுத்துக்காட்டுவதென்பது அல்லது வெளிப்படுத்துவது அவ்வளவு சுலபமான காரியம் ஒன்றுமல்ல!
நாம் புனிதமானதாக எண்ணிக் கொண் டிருக்கும் கன்னியாஸ்திரி மடங்களுக்குள், பல கன்னியாஸ்திரிகளுக்கும் பாதிரிமார்களுக்கும் இடையே திருட்டுத்தனமான முறையில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் உடலுறவை இந்த ‘ஆமேன்’ புத்தகத்தின் வாயிலாக ஜெஸ்மி சிஸ்டர் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.  (புத்தகம் மேலது, பக் - 55).  மடத்திற்குள்ளே கன்னியாஸ்திரிகள் போடும் ‘குடுமிப்பிடி’ச் சண்டையினையும் இப் புத்தகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
மடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கன்னி யாஸ்திரியின் கர்ப்பப்பை ஆபரேஷன் சென்று அகற்றப்படுகிறது.  இதுபற்றி மதர் சுப்பீரியர் ஒருவர் கீழ்க்கண்டவாறு கூறுவதாக வருகிறது:
“இந்தக் கன்னியாஸ்திரியின் கர்ப்பப்பை சிகிச்சை செய்து அகற்றப்படாமல் இருந்தால், மடத்திற்குக் ‘கெட்ட பெயர்’ வந்திருக்கக் கூடும்” என.  காரணம் இவர், ஒரு பாதிரியாரோடு ஒரு முறை உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டிருந்தார்.  இதுபற்றி, கேரளாவிலுள்ள ‘க்ரைம்’ பத்திரி கையில் செயதி வெளியாகியிருந்தது.  ஆனால், அந்தக் கன்னியாஸ்திரிக்கு மேலிடத்தில் ‘நல்ல பிடிப்பு’ இருந்ததால், ‘அந்தக் கேஸ்’ அப்படியே அமுக்கப்பட்டு விட்டது.  ஆனால் அதே வேளையில் மடத்தில், ஒரு பாவப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒரு சின்னத்தவறு செய்தால் கூட அவர்களுக்குத் தண்டனை மிகக்கடுமையாக வழங்கப்பட்டதையும் இப்புத்தகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது (பக்கம் - 78).
ஜெஸ்மி சிஸ்டருக்கு பதவி உயர்வு கிடைக் கிறது, கல்வித்துறை சம்பந்தமாக இந்தப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், அவர் கர்நாடக மாநிலத்தி லுள்ள தார்வார் பல்கலைக்கழகத்திலுள்ள நோட்டி பிகேசன் சென்று ஒரு ரிஃபிரஷர் கோர்சில் பங்கெடுக்க வேண்டும்.  எனவே, ஜெஸ்மி சிஸ்டர் அங்கு மூன்று வாரங்கள் தங்கவேண்டும்.  லூஸி சிஸ்டர் அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்ய முனைகிறார்.  அதற்காக வேண்டி, அங்கேயுள்ள இயக்குநரைக் கூப்பிட்டு அருகிலிருக்கும் மடத்தின் முகவரியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, ஜெஸ்மி சிஸ்டருக்கு தங்குவதற்கான வசதி செய்துகொடுக்க வேண்டும் என்றொரு காகிதமும் போடுகிறார்.  சாதகமான பதில் வரவே, அந்தப் பாதிரியாரின் முகவரியைப் பெற்றுக் கொண்டு ஜெஸ்மி சிஸ்டர் கர்நாடக மாநிலத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
அக்கடிதத்தில் பாதிரியார் ‘ராஜகம்பீரமான வரவேற்பை’ அளிப்பதாக உறுதியளித்திருந்தார்.  ஆனால், உண்மையில் ஜெஸ்மி சிஸ்டர் நினைத் திருந்ததோ, அங்குள்ள பெண்கள் விடுதியில் சென்று, மூன்று வாரமும் தங்க வேண்டுமென! ஆனால் இந்த ஆசையை அவர் வெளியிட, பிற கன்னியாஸ்திரிகள் அதற்குச் சம்மதிக்கவில்லை.  அங்குள்ள பாதிரியார் விடுதியில்தான் தங்க வேண்டுமென கட்டாயப்படுத்துகிறார்கள்.
தங்க விருப்பமில்லாத ஜெஸ்மி சிஸ்டர் வேறு வழியின்றி ‘கடவுளே, இப்போது திடீரென்று எனக்குக் காய்ச்சல் வராதா, அதைக் காட்டி யாவது தப்பிவிடலாமே’ என உள்ளூர ஜெபிக் கிறார்.  அவர் நினைத்தது மாதிரியே விஷக் காய்ச்சல் வருகிறது.
அப்போதும் பிற கன்னியாஸ்திரிகள் ஜெஸ்மி சிஸ்டரை விடவில்லையாம்! ‘நீ, போயே ஆக வேண்டும்’ என்று நிர்ப்பந்திக்கிறார்கள்.
‘நீ, போகவில்லையெனில் உனக்காக ஒதுக்கப் பட்டிருக்கும் கல்லூரியின் பணம் பாழாகிவிடும்’ எனச் சொல்லி ஜெஸ்மி சிஸ்டரை வற்புறுத்து கிறார்கள்; குறிப்பாக, சுப்பீரியர்.
‘வேகமாகப் புறப்படு; பயணத்துக்குத் தயாராகு’ என்று.
அவர்கள் கட்டாயப்படுத்தியதன் பேரில் ஜெஸ்மி சிஸ்டர் புறப்படுகிறார்.  தான் மேற் கொண்ட பயணத்தையும், அங்கே சந்தித்த அனு பவங்களையும் ஒரு கதை போல் அவர் சித்திரிக் கிறார்.
“நான், அதிகாலையில் ரயில் நிலையத்தில் போய் இறங்கியதும், அந்தப் பாதிரியார் என் வரவைக்காத்து ரயில் நிலையத்தில் நின்றுகொண் டிருப்பதைக் கண்டேன்.  நான், ரயிலிலிருந்து இறங்கியதும் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு ஓடிவந்து, அவருடைய உடலோடு சேர்த்து, அரவணைத்தார்.  பின், ராஜ வரவேற் போடு என்னை அவர் தங்கியிருந்த அறைக்குள் அழைத்துக் கொண்டு போனார்.  என்னை அவர் அங்கே கூட்டிக் கொண்டு போவதற்குச் சில காரணங்கள் இருந்திருக்க வேண்டும்.  பஸ் பயணத்தின் போது, கல்லுரி வளாகத்தில் மரங் களுக்கு அடியில் ஆண்களும் பெண்களும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து சிரித்துப் பேசிக்கொண் டிருப்பதை என்னிடம் சுட்டி, உடலின் மீது காட்ட வேண்டிய அன்பைப் பற்றிப் பாதிரியார் எனக்கு அறிவுரை சொன்னார்.  திருமணம் செய்து கொள்ளாமலே பெண்களுடன் (திருட்டுத் தனமாக) உடலுறவில் ஈடுபட்டுவரும் பாதிரியார் களைப் பற்றியும், பிஷப்புகளைப் பற்றியும் எனக்கு அவர், கதை கதையாகச் சொன்னார்.
“ஒரு பிஷப், ஒரு பெண்ணுடன் ஒன்றுகூடி தாம்பத்திய உறவில் ஈடுபட்டு அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும், அந்தக் குழந்தையை வளர்ப்பதற்குரிய பண உதவியை அவர் செய்து வருவதாகவும் பாதிரியார் உதாரணத்துடன் பேசினார்.”
“அதைக் கேட்டுக்கொண்டிருந்த நான் நினைத்தேன்; ‘நம்ப, பாரதிரியாருக்கு என்னாச்சு? ஏன், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இப்படி உளறிக் கொண்டிருக்கிறார்?’- என்று, எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.  பிறகு, அவர் போட்டு வைத்திருந்த காபியைக் குடிப்பதற்காக வேண்டி என்னை அறைக்குள் அழைத்துச் சென்றார்.  நான், கட்டிலில் உட்கார்ந்து காபியைக் குடித்துக் கொண்டிருந்தேன்.  உள்ளே உட்காருவதற்கு அந்த ஒரு கட்டில் மட்டும் கிடந்தது.  அந்த வேளையில் என்னருகே வந்து உட்கார்ந்து கொண்ட பாதிரி யார், திடீரென்று மூச்சு முட்டும்படியாக என்னை இறுகக் கட்டிப் பிடித்தார்.  நான், அவருடைய பிடியிலிருந்து தப்பிப்பதற்காக வேண்டி முயற்சித்த போது, என்னுடைய இரண்டு மார்புகளையும் அவர் தன் கைகளால் இறுகப் பற்றிப் பிடித்தவாறு, அவைகளை அவருக்குத் திறந்து காட்டும்படி என்னை வற்புறுத்தினார்.  நான் கோபத்தோடு அவருடைய கோரிக்கையை நிராகரித்துக் கொண்டு எழுந்த போது, என்னைப் பிடித்து அவர் பல வந்தமாக உட்காரவைத்துக் கொண்டு கேட்டார்:
“எப்போதாவது நீ, ஒரு ஆணைப் பார்த் திருக்கிறாயா?” பாதிரியார் என்னை நோக்கிக் கேட்டார்.
“நான் அதற்கு ‘இல்லை’ யெனத் தலை யாட்டினேன்.  உடனே அவர், தன்னுடைய ஆடை களை அவிழ்த்தெறிந்தார்.  அதைக் காண, எனக்கு வெட்கமாக இருந்தது.  நாவல்களில் இது மாதிரி யான விஷயங்களைப்பற்றி நான் வாசித்திருந் தாலும் கூட, இதுவரையில் நான் என்னுடைய கண்களால் ஒரு போதும் இக்காட்சிகளைக் காண விரும்பியது கிடையாது.  ஆனால், நான் இப் போது இதைக் கண்டவுடனே என் நினைவுக்கு வந்தது, சில்வியாப்பிலாத்தினுடைய ஒரேயொரு நாவல் மட்டுமே! ‘ஆமையினுடைய தலை’போல் என்று அவர் தன்னுடைய ‘பெல்ஜார்’ என்ற நாவலில் விவரித்தது எனக்கும் இவ்வேளையில் ‘சரி’ யென்றே பட்டது.”
“சற்று நேரம் கடந்த போது ‘பால்’ போன்ற ஒரு திரவத்தை எடுத்துக்காட்டிக் கொண்டு, அதனுள்ளேயுள்ள ஆயிரக்கணக்கான உயிரணுக் களைக் குறித்து எனக்கு பாதிரியார் வகுப்பெடுத் தார்.”
“பிறகு, என்னை, எனது உடைகளை அவிழ்த்துப் போடுமாறு வற்புறுத்தினார்.  எனக்கு தப்பிச் செல்வதற்கு வேறு வழி தெரியவில்லை.  கடைசியில், ஒரு நிமிடம் வரையில் நான் என்னுடைய உடம்பை நிர்வாணமாக்கிக் கொண்டு அவர் முன்னால் நின்றேன்.  பின், ஆடைகளை எடுத்து உடுத்திக் கொண்டு நான் மீண்டும் அவருடன் என் பயணத்திற்குத் தயாரானேன்.  அவர், என்னை ரயில் நிலையத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்.  இம்மாதிரி சம்பவத்தை ஒருபோதும் விரும்பாத நான், எதிர்பாராமல் நடந்த இதைப்பற்றி பச்சா தாபத்தோடு நினைத்துப் பார்க்கமுடியும்.  வாழ்க் கையில் சின்ன வகையான மானபங்கத்தைக்கூட நாங்கள் கன்னியாஸ்திரி மடத்தில் எதிர்பார்த்தது கிடையாது! நான் விஷக் காய்ச்சலினால் பாதிக்கப் பட்டிருந்த போதும் கூட, என்னை அந்தப் பாதிரி யார் தங்கியிருக்கும் இடத்திற்குக் கட்டாயப் படுத்தி அனுப்பிவைத்த கல்லூரி முதல்வரைத் தான் நான் குற்றம் சாட்ட நினைத்தேன்.”  (புத்தகம் மேலது, பக்- 88, 89)
ஜெஸ்மி சிஸ்டர் மேலும் தொடர்கிறார்: “தெரியாமல் செய்யும் சின்னச்சின்ன தவறுகளுக் காக வேண்டிக்கூட கன்னியாஸ்திரி மடத்திலுள்ள சுப்பீரியர் சிஸ்டர், முதல்வர், மதர் புரவின்சியல் போன்றவர்கள் என்னிடம் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.  அவைகளிலுள்ள ஒரு தவறு அல்லது என் மீதுள்ள புகார் என்ன வென்று தெரியுமா? நான், எங்கள் மடத்திலுள்ள சமையற்காரப் பெண்ணுடன் சேர்ந்திருந்து அடுக் களைக்குள் உட்கார்ந்து சாப்பிட்டேன் என்ப தாகும்.  இது, ஒரு உதாரணம் மட்டுமே! இப்படி இன்னும் பல காட்சிகள், வெளியுலகத்திற்குத் தெரியாமல் விடுதியில் அரங்கேறிக் கொண்டிருந்தன என்று இப்புத்தகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.”
அவர் சொல்கிறார்: “பொதுவாக என்னுடைய உறவினர்களை, என்னை வந்து பார்ப்பதற்கு வார்டன் அனுமதிக்க மாட்டார்.  எனவே, இதை யறிந்து அவர்களும் என்னைப் பார்ப்பதற்காக வேண்டி வருவது கிடையாது.  ஆனால், அதே வேளையில் என்னுடைய இன்னொரு தோழி, அவருடைய தோழியின் அம்மா இறந்து போனதன் காரணமாக எங்கள் விடுதியிலுள்ள பெண்ணை, அவளுடைய தாயாக நடிக்க வைத்துக்கொண் டிருக்கிறாள் என்ற சேதி எனக்குக் கிடைத்தது.  ரொம்பவும் சொடியுள்ள அப்பெண், முழு நேரமும் நான் மேலே குறிப்பிட்ட அவளுடைய ‘அம்மா’வுடன் இருப்பதினால், படிப்பில் ரொம்ப மோசமாகிக்கொண்டிருந்தாள். அம்மாவாக நடிக்க வந்த சீனியர் சிஸ்டர், எவருக்கு அம்மாவாக நடிக்க வந்தாளோ, அந்த இளம் சிஸ்டரின் வாய்க்குள் தன் மார்புகளைத் திணித்து, பல மணி நேரமாக அவளைச் சுவைக்கச் செய்வதை நான் தெரிந்து கொண்டேன்.  இந்த நாடகம் முழுவதும் என்னுடைய சொந்தக்காரப் பெண்ணின் அறைக்குள் வைத்துதான் அரங்கேறிக் கொண்டிருந்தது.  மார்பு வாயில் திணிக்கப்படும் அந்த ஜுனியர் பெண்ணும் என்னுடைய சொந்தக்காரப் பெண்ணும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தார்கள்.  சீனியர் கன்னியாஸ்திரி, அவர்களுடைய அறைக்குள் வரவும், தினசரி இந்த நாடகம் தொடங்கிவிடும்.  அந்த வருடம் படிப்பின் இறுதியாண்டு ஆனதால், நான் இந்த அம்மை - மகள் உறவில் தலையிட விரும்பவில்லை.  மட்டுமில்லை; இதை எப்படி, என்னால் வார்டனிடம் சொல்ல முடியும்? ஆனாலும் என்னுடைய உறவுக்காரப் பெண்ணைக் கூப்பிட்டு வைத்து, இது சம்பந்தமாக அவளுடைய அபிப்பிராயம் என்ன? எனத் தெரிந்து கொள்ள நினைத்தேன்.  இதை யாரிடம் தெரிவிக்கலாம் என, எண்ணி ஏங்கிக் கொண்டிருந்ததினால் நான் கேட்டதும், அவளுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்துவிட்டது.”
“விஷயத்தை, அவளுடைய சம்மதத்தோடு நான் அவளுடைய ‘டாடி’யிடம் தெரிவித்து, எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னேன்.  பிறகு, மனநிலை பாதிக்கப்பட்டுத் திருமணத்தையொட்டி சிகிச்சைக்காக வேண்டி அவளை மனநிலை மருத்துவரிடம் கூட்டிக்கொண்டு போகும்படி யாயிற்று.  அந்த அளவுக்கு, விடுதியில் நடைபெற்ற சம்பவம், அப்பெண்ணின் மனநிலையைப் பாதித் திருந்தது.” (புத்தகம் மேலது, பக்கம் - 99).
சாதி, பொருளாதாரம், கல்வித்தகுதி என, இவைகளின் அடிப்படையிலும் கன்னியாஸ்திரி மடங்களில் வேறுபாடு பார்க்கப்பட்டது என் கிறார் ஜெஸ்மி சிஸ்டர்.
தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து வந்து சேர்ந்த கன்னியாஸ்திரிகள், மேல்சாதியிலிருந்து வந்த கன்னியாஸ்திரிகள் உட்காரும் நாற்காலியில் உட்காரக்கூடாது; அவர்கள், தங்களுடைய ‘டிரங்கு’ப் பெட்டியின் மீதுதான் உட்கார வேண்டும்.  இது போக, அவர்களுக்கு அநேகமாக அடுக்களையிலும், தோட்டத்திலும்தான் வேலைகள் கொடுக்கப்பட்டன.  தோலின் நிறம், சாதி, வறுமை என இவைகளை அடிப்படையாகக் கொண்டே மடத்தில் ஒவ்வொருவருக்கும் மதிப்பும், மரி யாதையும் வழங்கப்பட்டது, என்கிறார், ஜெஸ்மி சிஸ்டர் (புத்தகம் மேலது, பக் - 158).
நம் தமிழில் வெளிவந்த ‘கருக்கு’ நாவலில் (இதுவும் சுயசரிதை போன்று எழுதப்பட்ட நூல் தான்!) பாமா சிஸ்டர், கன்னியாஸ்திரி மடத்தில் நடைபெற்ற சில விஷயங்களை ஓரளவுக்குத் தொட்டுக் காட்டியிருந்தார்.  அது, வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.  ஆனால், இதுமாதிரி இன்னும் ஏராளமான காரியங்கள் மதம் என்ற போர்வையின் கீழ் வெளியே தெரியாமல் நடை பெற்றுக் கொண்டிருக்கலாம்! அவைகளெல்லாம் அந்நாவலின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கு மானால் அது, இன்னும் பிரம்மாண்டமானதாக அமைந்திருக்கும் என, வாசகர்களை எண்ண வைத்தது.  மட்டுமின்றி, அந்நாவலில் பாமா சிஸ்டரின் கவனம், தீண்டாமை விஷயத்தில் மட்டுமே குவிந்திருந்தது. 
ஆனால் கேரளத்தில் பிறந்து, வளர்ந்த ஜெஸ்மி சிஸ்டரின் கவனமோ, கன்னியாஸ்திரி மடங்களுக்குள் மறைமுகமாக நடைபெற்றுவரும் தீண்டாமை, வறுமையின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு, பாலியல் வன்முறை, தகாத, பாலியல் உறவு-போன்றவைகள் மீதெல்லாம் குவிந்திருக்கிறது.  அங்கே நடைபெற்ற பாலியல் வன்முறையிலிருந்து தன்னாலும் தப்பித்துக் கொள்ள இயலவில்லை என்பதை அவர் மனந் திறந்து எழுதியிருப்பது ஜெஸ்மி சிஸ்டரின் நேர் மையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. 
ஒருவேளை அவர் நினைத்திருந்தால், அந்தப் பாலியல் வன் முறைக்கு அவர் ஆளானதை (அவர், தன் மார்பு களையும் உடலையும் காம வெறிபிடித்து நின்ற பாதிரியாருக்கு முன்னால் திறந்து காட்டியதை) இப்புத்தகத்தில் சேர்க்காமல் தவிர்த்திருக்கலாம்.  அல்லது மறைத்திருக்கலாம்! ஆனால், சிஸ்டர் ஜெஸ்மி அதைச் செய்யவில்லை!
சில உண்மைகளை வெளிப்படுத்துவதற்காக வேண்டி, அவர் தன்மான- அவமானத்தைக்கூடப் பொருட்படுத்தவில்லை. நம் மானம் போனாலும் பரவாயில்லை; கடவுளின் பெயரால் மடங்களுக்குள் நடைபெற்று வரும் கொடுமையினையும், அநியாயத்தையும் வெளியுலகத்திற்கு எடுத்துக்காட்டியே தீரவேண்டும் - என, ஜெஸ்மி சிஸ்டரின் உள்ளம் கொதித்திருக்க வேண்டும்! இதைத்தான் சிஸ்டரின் ‘ஆமேன்’ சுயசரிதை நூல் நமக்கு உணர்த்திச் செல்கிறது.
ஆமென்
ஆசிரியர்: சிஸ்டர் ஜெஸ்மி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி. சாலை,
நாகர்கோவில் 629 001.
விலை: ரூ. 150/-

Wednesday, 6 July 2016

அப்பா நான் ஸ்கூலுக்கு போகலை ?

அப்பா நான் ஸ்கூலுக்கு போகலை ?
தூக்கத்தில் இருந்து எழும்போதே முதலாம் படிக்கும் எனது பையன்(5 வயது) பள்ளிக்கு செல்வதில்லை என்ற முனுமுனுப்போடுதான் எழுவான் . என்னதான் பிரச்சனை என்று அவனிடம் அனுசரணையாக கேட்டு பார்த்தால் – எங்க மிஸ் தலையிலேயே தட்டுறாங்கப்பா என்றான். எந்த மிஸ் என்று கேட்டால் சிஸ் மிஸ்  , இப்படி தினம் தினமும் அவனிடம் இருந்து புகார் வரவும் .
நான் எனது துணைவியாரை பள்ளிக்கு அனுப்பி வைத்தேன் . அவரிடம் நாங்கள் அடிப்பதே இல்லை என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்கள் .
மீண்டும் ஒரு வார காலம் எந்த பிரச்சனையும் சொல்லாமல் பள்ளிக்கி சென்றுவந்தான் மறுபடியும் இரண்டு நாட்களுக்கு முன்பு அடிக்கிறாங்க பல்லவி ஆரம்பிக்கவும் அந்த தனியார் பள்ளிக்கு சென்றேன்.
முதல்வர் இது கிறித்தவ பள்ளி யாரையும் அடிக்க மாட்டோம் நாங்கள் அன்பு நிறைந்தவர்கள் என மிகப்பெரிய லெக்சர் அடித்தார். சரி விசயத்துக்கு வாங்க ஏன் டீச்சர் அடிக்கிறாங்க என்று கேட்டதும். அவர் குழந்தைகள் அப்படித்தான் எதோ ஒரு விசயத்துக்கு பயந்து எதோ ஒன்றை சொல்கிறார்கள் என்றார்.
மெதுவாக விசாரித்து பார்த்தால் உண்மை நிலவரம் இதுதான். குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆட்களை தேடும் இம்மாதிரி பள்ளி கூடங்கள் குழந்தைகளை பற்றியோ அவர்கள் மன ஆரோக்கியம் பற்றியோ அறியாத ஆசிரியர்களை நியமித்து, அவர்களின் உழைப்பை ஒருபக்கம் சுரண்டுவதும்
மறுபக்கம் பெற்றோருக்கு நாங்கம் ஸ்மார்ட் கிளாஸ் எடுக்கிறோம் அது செய்கிறோம் இது செய்கிறோம் என படம் காட்டுவதுமாக இருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு எப்படி போதிக்கனும் என்கிற நடைமுறை செயல்முறை வழிகாட்டுதல் பயிற்சி என்ற எந்த தகுதியும் இல்லாமல் (முக்கியமாக பி எட் ) இல்லாத ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்தி தனது கல்லா பெட்டியை மட்டும் நிரப்பி கொள்ளும் இவர்களுக்கு அரசு .
மழலை பள்ளிகளை திறக்கலாம் என்ற அறிவிப்பை கொடுத்துள்ளது.
//நான் வேலைக்குப் போன சமயத்தில், என் குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. இந்த நிலைமை மற்ற குழந்தைகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நானும், என் கணவரும் சேர்ந்து இப்பள்ளியை ஆரம்பித்தோம். பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தைகள், மற்றவர்களைப் பார்த்து, ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். வரிசையாக நிற்பது, ஒருவருக்கொருவர் உதவுவது, பங்கிட்டுக் கொள்வது போன்ற குணங்கள், பள்ளிகளில்தான் வளர்க்கப்படுகின்றன.//
மழலை பள்ளிகளுக்கு ஆதரவு தரும் இந்த பெண்மணி சொல்வது கிரீச் எனப்படும் பால்வாடிகள் அல்லது குழந்தைகல் காப்பகங்களை .
அரசின் குழந்தைகள் காப்பகங்களான பால்வாடிகளில் சரியான முறையான
பராமரிப்பு இல்லாமையால் குழந்தைகளை தனியார் கிரிச்சில் விட்டார்கள் இப்போது 1.5 வயது குழ்ந்தைக்கு பள்ளியாம்.
ஒன்றரை வயது குழந்தைக்கு என்ன ஒழுக்க போதனை வேண்டி கிடக்கிறது .
நாங்கள் எல்லாம் 5 வயதில் முதலாம் வகுப்பில் சேர்ந்தோம் .
அறிவில் வளர்ச்சியடையாமல் போய்விட வில்லை . அரசாங்க பள்ளி கூடத்தில் படித்த எங்களது அறிவு எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை
ஆங்கிலம் :
ஆங்கிலம் சொல்லி தருகிறோம் என சொன்னால் வேலைக்கு ஆகாது என்பதால் இன்றைய தனியார் பள்ளிகள் அனைத்து பாடத்தையும் ஆங்கிலவழி போதிக்கிறார்கள்.
ஆனால் தாய்மொழி மூலம் கல்விதான் சிறந்தது என உலகத்தினர் பெரும்பாலானவர்களின் கருத்து. இதை ஏன் தனியார் பள்ளிகள் தருவதில்லை என்றால் ஆங்கில மோகமே காரணம்.
ஆங்கில மோகம் ஏன் என்று கேட்டால் ? வேலை வாய்ப்பு
நான் உட்பட நிறைய பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியாத பேச தெரியாத பள்ளி கூடத்தில் சேர்க்க விரும்பவில்லை ஏனெனில் அவர்களை இந்த போட்டி மயமான உலகம் ஒன்றும் தெரியாதவர்களாக்க விரும்பவில்லை.
இந்த போட்டி மயமான உலகம் எதனால் வந்தது என்றால் முதலாளித்துவம்
ஆரம்ப பள்ளியில் ஆரம்பிக்கும் போட்டி அவனுக்கு / அவளுக்கு வேலை கிடைப்பதுவரை மெகா போட்டி இங்கு நடக்கிறது.
திறமைகள் என்பன ஆங்கிலம் பேசுதல் எழுதுதல் என்ற வாறு சுருங்கி போய் விட்டது.


உலகமயமாக்கலின் விளைவாக உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படும் கேபிடல் எனப்படும் மூலதனம் ஆங்கிலம் பேச தெரிந்த தொழிலாளிகளை கோருகிறது.
உலகமயமாக்கலை மட்டும் ஒழித்து விடனும் என்றோ / ஊழலை மட்டும் ஒழித்துவிடலாம் என்றோ யாரும் கனவு கூட கானமுடியாது ஏனெனில்.
முதலாளித்துவம் என்கிற மரத்தின் சில கிளைகளே அவை எல்லாம்.
சரி கல்வியில் தனியார் மயத்தை ஒழித்துவிட முடியுமா?
பதில் கேள்வி போட்டி மயமான உலகில் போட்டியை ஒழிக்க முடியுமா?
முடியாது . என்றால் முன்னதும் முடியாது
ஏனெனில் இப்போது இருக்கும் போட்டி மயமான உலகில் தன் பிள்ளை தோற்றுவிட கூடாது என ஒவ்வொரு தகப்பனும் நினைக்கிறான்.
அது தப்பு என்கிறீர்களா?
ஆம் எனில் அவனுக்கு நீங்கள் கொடுக்கும் தீர்வு என்ன?
அரசாங்க பள்ளிக்கு போ என்பதா? அரசாங்க பள்ளியை சீர்திருத்த போராடு என்பதா?
நாம் போராடலாம் …. ஆனால் ஒவ்வொரு அகாடமி இயர் முடியும் போதும் கல்வி திறமையை அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவன் இழந்து கொண்டே வருகிறான்.
தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு வர்க்கம் மிக திறமையாக படித்து முன்னேறி அடுத்த தலைமுறைக்கு உழைக்கும் மக்களின் குழந்தைகளை
அடிமையாக்க தொழிலாளிகளாக்கி சுரண்ட உருவாகி வருகிறார்கள்.
தனியார் பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என சொல்லும் ஒவ்வொரு முறையும் அரசு பள்ளிகளை சீர்திருத்துங்கள் என்ற கோசம்தான் பதில்.
இன்றைய தனியார் பள்ளிகள் உருவாக அரசு பள்ளிகளே காரணம் . இன்றைய தனியார் மருத்துவமனைகள் உருவாக அரசு மருத்துவமனைகளே காரணம் .
இன்றைய கொரியர்கள் தனியார் வசமிருக்க . போஸ்டாபிஸ் களின் தரமற்ற சேவையே காரணம்
இதுதான் இதுதான். அரசு அதிகாரத்தில் இருக்கும் அதிகாரவர்க்க கும்பல் செய்யும் மோசடியின் விளைவாக .
அவர்களை எதிர்க்க முடியாமல் அவர்களுக்கிடையே சங்கம் வைத்துகொண்டு
அவர்களிடம் வாங்கி தின்று கட்சி வளர்க்கும் ஒவ்வொரு கட்சியும் கண்டு கொள்ளாமல் இருக்கும் இந்த அதிகார வர்க்கம் ஒழிக்கப்படவேண்டும்
அவர்கள் நாலுகையிலும் வாங்கி கொள்வார்கள் . நமது குழந்தைகளுக்கு சரியான கல்வி போதிக்க மாட்டார்கள்
அவர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை.
உடனே கருணாநிதி சரியில்லை / ஜெயா சரியில்லை என்று அரசியல் வாதிகளுடன் மோதல் தொடரும் ஆனால் தீர்வு கிடைக்காது.
யார் அதிகாரிகளோ அவர்கள் 58 வயதுவரை சும்மா அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு சம்பளம் வாங்குவார்கள்
இந்த நாட்டில் அவர்களை எதிர்த்து நடந்த போராட்டங்கள் எத்தனை
.அவர்களை எதிர்த்து நடந்த பெற்றோர் கூட்டங்கள் எத்தனை .
கணக்கெடுத்து பார்த்தால் ஒன்றுமில்லை.
ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நாள் பள்ளிக்கு சென்றால் இன்று என்ன பிரச்சனை வருமோன்னு தனியாரில் வேலை பார்த்து மாணவனை உருவாக்குகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு சென்றால் ஆசிரியர் வருவாரா? என
யோசித்து கொண்டே செல்கிறார்கள் அரசு பள்ளி மாணவர்கள்.
ஏன் இந்த சோம்பேறி ஆசியர்களுக்கு எதிராக போராட இந்த போலி கம்யூனிஸ்டுகள் தூண்டுவதில்லை தெரியுமா?
அவர்களும் தங்கள் அமைப்பில் சங்கம் வைத்துள்ளார்கள்.
அவர்களில் பெரும்பகுதி சந்தாவாக இந்த இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளையும் வாழவைக்கிறது?
இதனால் போராட வருவதில்லை.
மறுபுறம் இந்த நக்சல்பாரிகள் தனியார்மயத்தை எதிர்ப்போம் என சொல்லி
மாயமானுடன் போரிடுகிறார்கள்.
இவர்களுக்கு தத்துவ பிரச்சனை .
பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் எத்தனை பாடம் நடத்தாத பள்ளிகள் எத்தனை இவற்றுடன் ஒரு போராட்டம் கண்டன ஆர்பாட்டம் செய்யாமல்.
தனியாருக்கு தாரை வார்க்காதே என சொல்வதால் எந்த பெற்றோரும் கேட்க போவதில்லை.
ஆனால் தனியாரின் கொள்ளை வேறுவிதமானது:
அங்கே பிஎட் படித்த ஆசிரியைகளை வேலைக்கு அமர்த்துவதில்லை. குழந்தைகளின் மனதத்துவம் தெரியாத ஆசிரியைகள் . குறைந்த சம்பளம் அதிக உழைப்பினால் கலைப்படைந்து . மாணவர்களின் மேல் எரிந்து விழும்மனோ பாவமும் .
மார்க்குகளை மட்டுமே நோக்கமாக கொண்டு . அடுத்தவனை முந்து முந்து என சொல்லி சொல்லி வளர்க்கும் மனோபாவமும் .வளர்ந்து விட்டது.
என்னதான் தீர்வு என்றால். தனியாரிடம் இருக்கும் கல்வியை அரசால் தான் நடத்தப்பட வேண்டும் .
ஆனால் இப்போது தனியார் பள்ளிகள் எப்படி நடத்துகிறதோ அப்படி
மிகுந்த திறமையான மாணாக்கனை உருவாக்க்காத ஆசிரியர்களுக்கு கேள்விகள் எழுப்பப்பட வேண்டும் . அவர்கள் கேள்விக்கு உட்பட்டவர்களாக்கப்பட வேண்டும் .
இதை செய்தால் ஒரு அமைதியான ஆரோக்கியமான கல்வி நமது குழந்தைகளுக்கு கிடைக்கும் அதுவரை போராட்டம்தான்.

படிக்க :

ஆகப் பள்ளியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றல் பெற்ற இந்த மதிப்பெண்வாங்கிகளின் வகுப்புகளுக்குத்தான் பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல் முழுவதுமாக அர்ப்பணம் செய்யப்படுகிறது. நம் கல்வி முறையில் கற்பித்தல், பயிற்றுவித்தல் என்னும் இரண்டு முறைகள் உள்ளன. இவற்றில் மதிப்பெண் வாங்குவதற்கு உதவுவது பயிற்றுவித்தல்தான். பயிற்றுவித்தல் என்பது மாணவர்களை மதிப்பெண் வாங்குவதற்கு ஏற்ற வகையில் தினந்தோறும் தேர்வு எழுதவைத்துப் பயிற்சி அளித்தல். பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்குக் கோடை விடுமுறை என்பதே கிடையாது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்தவுடன் மதிப்பெண் புகழ் பள்ளி ஒன்றில் நுழைவுத் தேர்வு எழுதிப் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்துவிடும் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை என்பது எட்டாம் வகுப்போடு சரி. தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குக் கோடை விடுமுறையே இல்லை. எல்லாச் சனிக்கிழமைகளிலும் பள்ளி உண்டு. சிலசமயம் ஞாயிறுகளிலும் வகுப்புகள் உண்டு.
இப்படி ஆண்டுக்கணக்கில் விடுமுறையே இல்லாமல் தொடர்ந்து பள்ளி, பாடம், தேர்வு என்றிருக்கும் மாணவர்களின் மனநிலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கோடை விடுமுறை தொடக்கத்திற்குப் பொதுவான நாள் ஒன்றை அறிவித்து அந்த நாளுக்குப் பின் எந்தப் பள்ளியும் வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் கோடை விடுமுறைக் காலத்தில் பள்ளி வாகனங்கள் எதுவும் ஓடக் கூடாது என்றும் குறிப்பிட்ட நாளில்தான் எல்லாப் பள்ளிகளும் திறக்க வேண்டும் என்றும் ஒரு சமச்சீர் முறையை அரசு ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது? கல்விமுறையில் மட்டுமல்ல பள்ளி நடைமுறைகளிலும் சமச்சீர் தேவை.
நிறைய அரசு பள்ளிகளில் குடிநீர் , கழிப்பறை வசதிகள் இல்லை என்கிறது இந்த செய்தி
More than a third of the schools surveyed had unusable toilets or the facilities were in poor condition, 63 per cent had no playgrounds, and 60 per cent had no boundary walls. More than 80 per cent of schools did not provide age appropriate admission to children and over 60 per cent asked for proof of age, both a violation of norms under the RTE, the survey showed.

"Every time we need to use the washroom, we have to go home," says 10-year-old Rekha who studies at a government school in Madhya Pradesh's Vidisha district. Her school doesn't have a playground, drinking water facilities or a boundary wall.  

 அரசு பள்ளிகளின்  டீச்சிங் மெத்தடாலஜி ரொம்ப பழசாக இருக்கிறது என சொல்லும் இந்த செய்தியில் 85 சதவீதம் ஆரம்ப பள்ளி படித்தவர்களில் 39 சதவீதமே மேல்நிலை பள்ளிகளுக்கு செல்கிறார்கள் என்கிறது. அதிகளவு இடைநிறுத்தலுக்கு வறுமை மட்டுமல்ல காரணம் திறமையற்ற போதனை முறையும்தான்
The curriculum and teaching methodologies stand obsolete and outdated, with the emphasis being on rote-learning and merely developing reading and writing skills instead of holistic education. Lack of vocational training and non-availability of such courses renders students with barely any employable skills at the end of their schooling. These factors, coupled with other social circumstances have lead to alarmingly high dropout rates in the country. Most schools are miles away and largely inaccessible to the students. While noting that adequate number of elementary schools is to be found at a “reasonable distance from habitations”, the ministry admits in its website that this is not the case with regard to secondary schools and colleges. The gross enrolment rate for elementary education in 2003-04 was 85 percent, but for secondary education, the enrolment figure stood at 39 percent. Figures put out by the Ministry of Human Resource Development’s Department of School Education and Literacy indicate that as many as two-thirds of those eligible for secondary and senior secondary education remain outside the school system today. These high rates of school dropouts as a result, lead to the ineffectiveness of the reservation policy in institutes of higher education.


யுனெஸ்கோவில் சமர்பிக்கபட்ட இந்த கட்டுரை சொல்வது
       
  • Excessive Non-Teaching Duties: Apart from teaching, all the government school teachers are assigned non-teaching work such as conducting census survey; facilitate polling during elections and various other activities which they have to compulsorily abide. It creates a lot of pressure on the teachers, a substantial amount of time is wasted in non-teaching work that affects the quality of education of the students as schools remains closed and even-if the schools are working, no classes are conducted.
  • Teacher Absenteeism: P Sainath, a renowned journalist in his famous book ‘Everybody loves a good drought’ had referred to government schools as Schools without Teachers. The UNESCO’s International Institute of Educational Planning study on corruption in education says that 25% teacher absenteeism in India is among the highest in the world. Most of the time the government school teachers are either in involved in non-teaching work of the Government or absent from the schools. Lack of accountability is a critical reason for the failure of public schools and also falling teaching standards.
  • Inefficient Special training programmes: A municipal school principal from Ahmedabad says that Government has launched Special training programmes for children who had dropped-out of schools or never had a chance to go to school. The programme promises free transportation to the students but most schools has no provision for providing free transportation. Most teachers have to walk their students to their home and back, especially among girls. It has resulted in teachers getting frustrated as their work is increased manifold affecting the quality of the programme.
  • Lack of Infrastructure facilities: An average government school in India can be pictured as an old dilapidated building, classrooms with broken windows, wrecked chairs and unhygienic toilets, if they are fortunate enough to have one.  A school teacher in Ahmedabad revealed that their school does have separate toilets for boys and girls and hence most girls do not feel comfortable in attending the school. A school teacher in Pune on a condition to maintain anonymity revealed that their school had submitted a request for 20 computers for the school, they did receive 20 computer but 17 of which never worked.
  • Incompetent teacher: Pune Municipal Corporation initiated 30 English medium government schools but most of the teachers in these schools were transferred from the existing regional language schools. These teachers are not competent to teach in English medium school as their own education has been in regional language schools and they have always taught in regional language schools. It has highly affected the quality of education in these schools.
  • Lack of Capacity building initiatives: The world is changing fast and the education system needs to keep up the pace but the government schools are still teaching age-old curriculums and methods. Capacity building for teachers is required so that they can cope-up with the current trends and adapt teaching methods that would keep the students motivated and interested in the studies and make the best of their education.
  • Lack of support from the families of students: All the government school officials I interacted-with shared this feedback that they face a tough time seeking the support of families of the students. Most parents doesn’t allow their daughters to continue their education after pre-primary or primary level whereas the drop-out ratio amongst boys increases manifold during high school as the parents want their sons to take-up a job and earn money for the family. Due to lack of support from the family, it becomes a very difficult task for the teachers to keep the students motivated in studies. Understanding the role of child labour issues and its interaction with the education system is a critical challenge that needs to be addressed.
0

Add a comment

அப்பாக்கள் தினமோ அப்பாவின் தினமோ தெரியாது அப்பாவை பற்றி ஞாபகபடுத்தி விடுகிறார்கள் . ஒரு செய்தி படிச்சேன் அப்பாவின் சம்பாத்தியத்தில் செலவு செய்ய மகன் யோசிப்பதில்லை ஆனால் மகனின் சம்பாத்தியத்தில் செலவு செய்ய அப்பாக்கள் நிச்சயம் யோசிக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய உண்மை .

தன் மகன் கஸ்டப்பட்டு அனுப்பும் பணத்தை தான் ஊதாரியாக செலவு செய்ய கூடாது என்று தினமும் ஒரு நோட்டில் எழுதி வைப்பதாகவும் நான் வந்தால் காட்ட வேண்டும் என்றும் சொல்வதாகவும் அம்மா சொன்னார் எனக்கு அப்போது புரியவில்லை ஏன் எழுதனும் என்று .

எல்லாருக்கும் அம்மாவைத்தான் நிரம்ப பிடிக்கும் எனக்கு மாறுதலாக அப்பாவை நிரம்ப பிடிக்கும்  .

அடிமைகளை உருவாக்கும் இந்த மனப்பாட கல்வியை விழுந்து விழுந்து மண்டைக்குள் ஏற்றி அதை அப்படியே பேப்பரில் வாந்தி எடுப்பவன் முதல் மாணவன் என்றால் அதை ஒரு கணினி கூட செய்து விடும் என்பதாலும் .

கடைசி பெஞ்சில் இருந்தாலும் வேறு பல திறமைகளை உள்ளடக்கிய உங்களை நான் வாழ்த்துகிறேன்

நமது நாட்டின் பிரதமர் டீக்கடைதான் நடத்தினார் நமது முதல்வரோ பத்து வரைதான் படித்திருக்கார் ஆக